ஈரோடு ரெயில் நிலையத்திற்கும் காவிரி பாளையம் ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாளத்தில் சம்பவத்தன்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரின் உடலை மீட்டு வேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவளத்தை கடந்த போது ரெயில் மோதி இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.