Type Here to Get Search Results !

இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு தடைவிதிக்கக்கோரிகாவல்துறை யிடம் திராவிடர் கழகத்தின் மனு

இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு தடைவிதிக்கக்கோரிகாவல்துறை யிடம்  திராவிடர் கழகத்தின் மனு
சென்னிமலையில் வரும் 13 -ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் ஈரோடு எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ந.வெ.குமரகுருபரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த செப்டம்பர் மாதம் 17 -ஆம் தேதி ஈரோடு அருகே சென்னிமலையில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெபம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே புகுந்த இருபதுக்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நபர்கள் உள்ளே புகுந்து ஜெபம் செய்து கொண்டிருந்தவர்களை தாக்கினர்.

இனிமேலும் ஜெபம் செய்தால் தொலைத்து விடுவோம் என்று கூறி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக கிறிஸ்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் சென்னிமலையில் வரும் 13 -ஆம் தேதி மாலை கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக துண்டு பிரசுரம் மூலமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக youtube மூலமாகவும் பரப்புரை செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக சென்னிமலையில் ஒரு விதமான பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.எனவே மத வெறியை தூண்டுகிற வகையிலும் குறிப்பிட்ட 
அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தால் வரும் 15 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் கோவை கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நாங்களும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.