Type Here to Get Search Results !

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பேச்சு: முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு முன்ஜாமின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பேச்சுமுன்னாள்அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனுக்கு முன்ஜாமின்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளத்தில் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர்சி.த. செல்லப்பாண்டியன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தூத்துக்குடி எம்.பி கனிமொழி உட்பட முதலமைச்சர் குடும்பத்தினரைபொது வெளியில் மிகவும் கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்தி இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பாக தி.மு.க. நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இந்த வழக்கில் கைது செய்யப்படக்கூடும் எனக் கூறி, முன்ஜாமின் கேட்டு சி.த.செல்லபாண்டியன், சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்த போது, அரசின் செயல்பாட்டை விமர்சித்ததாகவும், முதலமைச்சருக்கு எதிராக அவதூறாக பேசவில்லை என்றும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் நடந்து கொள்வதாக உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்தார்.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 15 நாட்களுக்கு விளாத்திகுளம் போலீசில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து, சி.த.செல்லபாண்டியனுக்கு முன் ஜாமின் வழங்கி

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.