Type Here to Get Search Results !

ஈரோடு ஈடிசியா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

ஈரோடு ஈடிசியா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (ஈடிசியா) 41வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2023-25 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.ஈடிசியாவின் 2023-25 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக ஸ்ரீதர், துணைத் தலைவர்களாக கந்தசாமி, பழனிவேல், ராம் பிரகாஷ், சங்கத்தின் செயலாளராக சுரேஷ் இணைச் செயலாளர்களாக பரத், கார்த்திகேயன் ஆகியோரும், பொருளாளராக சரவண பாபு, இணை பொருளாளராக சரத் மனோ ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக 34 பேர் பதவி ஏற்று கொண்டனர் கூட்டத்தில் முன்னாள் தலைவர்கள், முன்னாள் சங்க நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் புதிய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். சங்கத்தின் தலைவர் திருமூர்த்தி கூட்டத்தை வழிநடத்த அதனை தொடர்ந்து சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுவினர் பதவி ஏற்று கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.