Type Here to Get Search Results !

போலி பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - ஆட்சித் தலைவர் எச்சரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் போலி பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் - ஆட்சித் தலைவர் எச்சரிக்கை 
 பத்திரிகையாளர்கள்பத்திரிக்கை யாளர்கள் என்ற பெயரில் போலி மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தால் அவர் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் -ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்
 ராஜா கோபால் சுன்கரா எச்சரிக்கை.

பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்களிடம் ஏமாற்றி பணத்தை பறித்து விடுவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமில்லாமல் காவல்துறை மூலமாக வழக்குபதிவு செய்யப்படும்.

மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக பத்திரிக்கையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகள் பயன்படுத்தி, பொது மக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. அந்த நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசு பணியில் உள்ள அலுவலர்களிடம் அவர்களின் பணிக்கு இடையூறு அளிக்கும் வகையில் பிறரின் கோரிக்கை மனுக்களை, பத்திரிக்கையாளர் என்ற பெயரில் சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தகவல் தெரிவிக்கும்படி, அரசு அதுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பத்திரிக்கையார்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்வர்கள், உடனடியாக 94980-42428 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகுந்த ஆகாரத்துடன் குறுந்தகவலை அனுப்பினால், அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்னககள் மேற்கொள்ளப்படும் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அளித்த தகவல் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.