Type Here to Get Search Results !

ஈரோடு கருங்கல்பாளையம் நண்பர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த தாய்

ஈரோடு கருங்கல்பாளையம் நண்பர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த தாய்

ஈரோடு மாவட்டத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதான குழு மற்றும் ஸ்ரீ முருகப்பெருமான் சமூக சேவகர்கள், ஈரோடு கருங்கல்பாளையம் நண்பர்கள் இணைந்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை வருடா வருடம் தொடர்ந்து செய்து வருகின்றனர். மேலும் தலைவர்களின் பிறந்த தினத்திற்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து  ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு சிறுநீரகம் செயல் இழந்து, பொருளாதாரப் பிரச்சினையில் மிகவும் பாதிக்கப்பட்டு சிரமமடைந்ததை அறிந்த ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதான குழு மற்றும் ஸ்ரீ முருகப் பெருமான் சமூக சேவகர்கள் கருங்கல்பாளையம் நண்பர்கள் இணைந்து பாதிக்கப்பட்ட மைக்கேலுக்கு பத்தாயிரம் நிதி உதவி வழங்கினார்கள்.பாதிக்கப்பட்ட மைக்கேல் தனது பெற்றோர்களுடன் வசித்து வருவதால், நிதி உதவி வழங்கிய நண்பர்களுக்கு மைக்கேலின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதான குழு மற்றும் ஸ்ரீ முருகப்பெருமான் சமூக சேவகர்கள், ஈரோடு கருங்கல்பாளையம் நண்பர்கள் இணைந்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை வருடா வருடம் தொடர்ந்து செய்து வருகின்றனர். மேலும் தலைவர்களின் பிறந்த தினத்திற்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல் என்பவருக்கு சிறுநீரகம் செயல் இழந்து, பொருளாதாரப் பிரச்சினையில் மிகவும் பாதிக்கப்பட்டு சிரமமடைந்ததை அறிந்த ஸ்ரீ முருகப்பெருமான் அன்னதான குழு மற்றும் ஸ்ரீ முருகப் பெருமான் சமூக சேவகர்கள் கருங்கல்பாளையம் நண்பர்கள் இணைந்து பாதிக்கப்பட்ட மைக்கேலுக்கு பத்தாயிரம் நிதி உதவி வழங்கினார்கள்.பாதிக்கப்பட்ட மைக்கேல் தனது பெற்றோர்களுடன் வசித்து வருவதால், நிதி உதவி வழங்கிய நண்பர்களுக்கு மைக்கேலின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.