ஓசூரில் பேருந்தில் செல்போன், பணம் திருடிய மூன்றுநபர்கள்கைது
ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் 13.10.2023 ஆம் தேதி காலை 09.00 மணிக்கு செல்வ விண்ணரசி என்பவர் தனது சொந்த வேலை காரணமாக வீட்டில் இருந்து ஓசூர் பேருந்து நிலையத்திற்கு வந்த போது தன்னுடைய கைபையில் வைத்திருந்த செல்போன், பணம் ஐந்தாயிரம் ரூபாய் காணவில்லை எனவும் தன்னுடன் பேருந்தில் வந்த மூன்று பெண்கள் மீது தான் சந்தேகமாக உள்ளது என ஓசூர் டவுன் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்த போலீசார் செல்போன், பணம் திருடிய மூன்று நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்