Type Here to Get Search Results !

தமிழ் பேரவை ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் தொடக்கம்

தமிழ் பேரவை ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில்  தொடக்கம்
ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள தமிழ் பேரவை மற்றும் கல்லூரி பேரவை  ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் தொடக்க விழா நடைபெற்றது.விழாவுக்கு முதலியார் கல்வி குழுமங்களின் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலாளரும், தாளாளருமான கே.கே. பாலுசாமி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக எஸ்எஸ்எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் முனைவர் சங்கரராமபாரதி பங்கேற்று பேசினார்.

நிகழ்ச்சியில், பொருளாளர் மருத்துவர் விஜயகுமார், இணைச்செயலாளர் அருண்குமார் பாலுசாமி, துணைத் தலைவர்கள் முருகேசன், மாணிக்கம், கல்லூரியின் முதல்வரும் பேரவை தலைவருமான முனைவர் சங்கரசுப்பிரமணியம், இயக்குநர் முனைவர் வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதில், கல்லூரியின் மாணவ-மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி பேரவை துணை தலைவர் முளைவர் கார்த்திகேயன் வரவேற்றார். தமிழ் துறை தலைவர் முனைவர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.