யில் கோகுலாஷ்டமிவிழா நடைபெற்றது .
ஏ.ஈ.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கோகுலாஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது . இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கீழ்பவானி பாசன சங்க தலைவர் பெரியசாமி கலந்து கொண்டு, கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் மோகனராமகிருஷ்ணன் ,பொருளாளர் தீபா அறக்கட்டளை உறுப்பினர் பிரித்திவியா கலந்து
கொண்டு சிறப்பித்தனர். அறக்கட்டளை உறுப்பினர் ஜெயஹரிணி ஆசிரியர் தினநல்வாழ்த்துக்களை கூறி சிறப்புரை ஆற்றினார்.
மழலையர்கள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து பாட்டுப்பாடி நடனமாடினர். கோவர்த்தன மலையை கண்முன் நிறுத்தி சிறப்பாக நாடகம் நடத்தினர். கலை நிகழ்ச்சிகளை மாணவிகள் தொகுத்து வழங்கி நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.