Type Here to Get Search Results !

மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் தாய், மகன் பலி – ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!

மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் தாய், மகன் பலி – ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!

ஈரோட்டில் மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் தாய், மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இன்று காலை வீடு இடிந்து விழுந்ததில் தாயும், மகனும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே பகல் மற்றும் இரவு பார்க்காமல் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், ஈரோடு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரின் மனைவி சாலம்மா (வயது 40). இவர்களுக்கு பர்வீன் என்ற மகளும் முகமது அஸ்தக் என்ற 13 வயது மகனும் உள்ளனர்.
பேக்கரி கடை வைத்திருக்கும் ஜாகீர் உசேன் அதிகாலையில் வேலைக்குச் சென்றுள்ளனர்.

தொடர் மழையின் காரணமாக வீட்டின் மேல் கூரை சுவர் திடீரென இன்று (செப்டம்பர் 2) அதிகாலையில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த தாய் சாலம்மா மற்றும் மகன் முகமது அஸ்தக் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் கருங்கல்பாளையம் காவல்துறையினர் இறந்த நிலையில் இடுப்பாடுகளில் சிக்கியிருந்த தாய் மற்றும் மகனின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாய், மகன் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.