Type Here to Get Search Results !

கோபியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சம்ப்ரோக்ஷண விழா

கோபியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சம்ப்ரோக்ஷண விழா
கோபி கோடீஸ்வரா நகரில் அமைந்துள்ள நந்தகோகுலம் கோசாலை சன்னதியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சஹஸ்ரநாம பெருமாள், ஸ்ரீ ராதிகா சமேத நந்தகோபால சுவாமி மற்றும் ஸ்ரீ ருக்மாயி சமேத பாண்டு ரங்க சுவாமிக்கு மஹா சம்ப்ரோக்ஷண விழா நடைபெற்றது.
இதையொட்டி மஹா சுதர்சன ஹோமம், கோ பூஜை, அஸ்வபூஜை, பிரார்த்தனை, மஹா தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. சிறப்பு நிகழ்ச்சியாக, நேற்று (3ம் தேதி) காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத சஹஸ்ரநாம பெருமாள், ஸ்ரீ ராதிகா சமேத நந்தகோபால சுவாமி மற்றும் ஸ்ரீ ருக்மாயி சமேத பாண்டு ரங்க சுவாமி ஆகிய மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மஹா ப்ரதிஷ்டாபன, மஹா ஸம்ப் ரோக்ஷண விழா 6 கால யாகசாலை பூஜைகளுடன் நடைபெற்றது.
இதில் கூனம்பட்டி ஆதீனம் ஸ்ரீ சரவண மாணிக்க சுவாமிகள், ஸ்ரீகாமாட்சி சுவாமிகள், ஆர்ஷ வித்யா விருக்ஷம்ணஸ்ரீநித்ய முக்தானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஈரோடு ராஜாமணி பாகவதர் நாமசங்கீர்த்தனங்களை பாடினார். பின்னர், மாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.