Type Here to Get Search Results !

ராமேசுவரத்தில்அக்னி தீர்த்த கடல், கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடல், தரிசனம் செய்ய நீண்ட வரிசை என்றுஎதுவும் இல்லாமல் காணப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள்வருகை தந்து புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்வது வழக்கம்.அதேபோல் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட இடங்களுக்கும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏராளமாகவும், இதர நாட்களில் வடமாநிலத்தை சேர்ந்த யாத்ரீகர்களும் ராமேசுவரத்தில் குவிவார்கள்.அந்த வகையில், ராமேசுவரத்திற்கு விடுமுறை நாட்களில் குறைந்தது 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை இருக்கும். இதனால் வியாபாரம் அதிகளவில் காணப்படும். கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கும்.இந்நிலையில், தமிழகத்தில் காலாண்டு தேர்வு வருகிற 17-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இதன் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் மிகுவும் குறைந்தே காணப்பட்டது.அக்னி தீர்த்த கடல், கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடல், தரிசனம் செய்ய நீண்ட வரிசை என்று எதுவும் இல்லாமல் காணப்பட்டது. அதிலும் இன்று வந்த அதிக அளவிலான பக்தர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வருகை குறைந்துள்ளதாகவும், தேர்வு முடிந்த பின்னரே பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்படும் என தெரிவித்தார். மேலும் பூஜை பொருட்கள், கலைப்பொருட்கள் விற்பனையும் பெரிதும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் கூறினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.