Type Here to Get Search Results !

ஈரோடு புத்தகத் திருவிழா

 ஈரோடு புத்தகத் திருவிழா

ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்க நிகழ்வில்
எழுத்தாளர்கள் இமையம், சல்மா, கா.உதயசங்கர் பங்கேற்பு
 
19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் 08.08.2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்விற்கு yes & yes Infracon நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி.சண்முகன் தலைமையேற்றார்.

சிகரம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர். சிவலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். 
அண்மையில் எமைக்கவர்ந்த ஐந்து நூல்கள் ‘ என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய எழுத்தாளர் இமையம் , தான் சமீபத்தில் படித்த ஐந்து புத்தகங்கள் குறித்தும் அந்த புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கும் வரலாற்று நிகழ்வுகள், மனிதர்களின் வாழ்வியல் வலிகள் ஆகியவற்றைப் பதிவுசெய்தார்.

எழுத்தும் வாழ்வும் ‘ என்ற தலைப்பில் உரைநிகழ்த்திய எழுத்தாளர் சல்மா, இன்றைய சமூகம் பெண்களை எவ்வாறு நடத்துகிறது என்பதையும், தன் வாழ்வில் சந்தித்த பெண்களின் வாழ்நிலை குறித்தும் தனது உரையில் விளக்கிப் பேசினார்.

முன்னதாக ‘ குழந்தைகளின் அற்புத உலகில்…’ என்ற தலைப்பில் உரைநிகழ்த்திய கா.உதயசங்கர் , குழந்தை இலக்கியம் இன்று அடைந்திருக்கிற வளர்ச்சி, சமீப காலத்தில் அவ்விலக்கியத்திற்கு குழந்தைப் படைப்பாளிகள் அளித்த பங்களிப்பு குறித்து தன்னுடைய உரையில் விரிவாக விளக்கினார்.

ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ‘ உங்கள் நூலகம் ‘ இதழ் வெளியிட்ட ஈரோடு புத்தகத் திருவிழா சிறப்பு மலர் மேடையில் வெளியிடப்பட்டது. 

இந்நிகழ்வில் பொதுமக்கள், மாணவர்கள் , வாசகர்கள் எனப் பலதரப்பட்டோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.