Type Here to Get Search Results !

பரமத்திவேலூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில்குபேர மகாலட்சுமி யாக பெருவிழா

பரமத்திவேலூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில்குபேர மகாலட்சுமி யாக பெருவிழா

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் எழுந்த ருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் குபேர மகாலட்சுமி யாக பெருவிழா நடைபெற்றது.காலை 7 மணிக்கு மேல் ருத்ர பாராயணம், ருத்ர அபிஷேகம், ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு மேல் மகா மாரி யம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மகா மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடு களை வேலூர் மகா மாரியம்மன் கோவில் அறங்கா வலர் குழுவினர், கால சந்தி கட்டளைதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி  அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் குபேர மகாலட்சுமி யாக பெருவிழா நடைபெற்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.