Type Here to Get Search Results !

ஈரோடு தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு

தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு நீர் திறப்பு குறைப்பு

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லா ததால் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகி றது. இதனால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.68 அடி யாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1086 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று 300 கன அடியாக அதிகரி க்கப்பட்டுள்ளது. அதே நேரம் தடப்பள்ளி-அரக்க ன் கோட்டை பாசனத்திற்கு நேற்று வரை 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று 500 கன அடியாக குறைக்கப்பட்டு ள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 1005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்ப ட்டு வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.