Type Here to Get Search Results !

வெளிமார்க்கெட்டில் நூல்களை வாங்க விசைத்தறியாளர்கள் வலியுறுத்தல்

வெளிமார்க்கெட்டில் நூல்களை வாங்க விசைத்தறியாளர்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையாக இலவச திட்டத்தில் 1.63 கோடி வேட்டி, 1.68 கோடி சேலை கள் கைத்தறி மற்றும் விசைத்தறி, பெடல் தறிக ளில் உற்பத்தி செய்ய அறிவித்த னர். கடந்த மாதம் 19-ந் தேதி நூலுக்கான டெண்டர் முன் வைத்து கடந்த 2-ந் தேதி விலைப்பட்டியல் டெ ண்டர் ஓப்பன் செய்தனர். ஒப்பந்ததாரர் முன்வை த்த டெண்டர் தொகையை அதிகாரிகள் ஏற்கவில்லை. பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடந்த நிலையில் கடந்த 4-ந் தேதி நடந்த பேச்சு வார்த்தையை ஒப்பந்ததாரர்கள் புறக்கணி த்தனர். இதனால் இலவச வேட்டி, சேலை உற்பத்தி மீண்டும் தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி உற்பத்தியாளர் கூட்டமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது: ஈரோட்டில் கடந்த 24-ந் தேதி நடந்த விழாவில் பங்கேற்ற கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகஸ்ட் 5-ந் தேதி நூல் விநியோ கிக்கப்படும் 8-ந் தேதி உற்ப த்தி தொடங்கும் என்றார். கடந்த 5-ம் தேதி நடந்த நூல் டெண்டரில் விலை நிர்ணயத்தில் இழுபறி ஏற்பட்டு முடிவுக்கு வரவி ல்லை. இதனால் வேட்டி, சேலை உற்பத்தி மேலும் பல வாரம் தாமதமாகும். கடந்த 2001-ம் ஆண்டு முதல் இது போன்ற கால ங்களில் 15 முதல் 30 நாள் தேவைக்கான நூலை வெளிமார்க்கெட்டில் அரசு ஏற்கும் விலையில் வாங்கி அரசு நூற்பாலை வழங்கும் நூல் வந்ததும் அதை பய ன்படுத்தவர். அதற்குள் 30 நாட்களுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி நிறைவு பெற்றிருக்கும்.

இந்த நடைமுறையை செயல்படுத்த எதிர்பா ர்க்கிறோம். தற்போதைய நிலையில் வேட்டிக்கான 40 காட்டன் நூல், 3400 பை (வார்ப்) கூட்டுறவு நூற்பாலை மூலம் கைத்தறி துறை பெற்று மாவட்ட வாரியாக அனுப்பி உள்ளது. இந்த நூல் மட்டும் வந்தால் வேட்டி உற்பத்தி செய்ய இயலாது. பார்டருக்கானநூலும், ஊடைக்கான நூலும் வந்தால் மட்டுமே உற்பத்தி தொங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார். ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் சரவணன் கூறு ம்போது, இலவச வேட்டி, சேலைக்கான டெண்டர் கோரப்பட்டு அரசின் நிலையில் உள்ளது. வேட்டிக்கான நூல் 300 பை (ஒரு பை 50 கிலோ நூல்) வந்துள்ளது. விரைவில் விசைத்தறி கூட்டுறவு உற்பத்தி யாளர் சங்கத்துக்கு வழங்குவோம். விரைவில் பிறர் நூல் வந்துவிடும் என்றார்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.