Type Here to Get Search Results !

தேமுதிக சார்பில் தீரன் சின்னமலைக்கு நினைவஞ்சலி செலுத்தினர்

 தே.மு.தி.க சார்பில் தீரன் சின்னமலைக்கு நினைவஞ்சலி

ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பேரூராட்சி, ஓடாநிலை, தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களின் 218-வது நினைவு ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் அவர்களின் ஆணைக்கிணங்க பொருளாளர் பிரேமலதா அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு ஒருங்கிணைந்த மாவட்ட கழகத்தின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில்
ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஆனந்த், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் செல்வக்குமார், வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட அவைத்தலைவர் சதீஷ்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் ஆனந்தன், கணபதி, சஞ்சய்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள்
முத்துச்சாமி, பாபு, தமிழ்செல்வன், ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாஜலபதி,கார்த்திகேயன், சண்முகம், பகுதி செயலாளர்கள் சுசி ஆறுமுகம், வேல்முருகன், பெருமாள், மணிகண்டன், சிலம்பரசன், பச்சமுத்து, நகர கழக செயலாளர் மெய்யழகன், பேரூர் கழக செயலாளர்கள் பசுபதி, மாசிலாமணி, வட்ட செயலாளர்கள் சுரேஷ், சிவா, கார்த்தி, சக்தி, தமிழரசன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், பூபேஷ், ‌ ஸ்ரீதர்மணி, தலைமை கழக பேச்சாளர் விஜய துரைசாமி, மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.