Type Here to Get Search Results !

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல் துறை இணைந்து நடத்தும் இமைகள் திட்டம்

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மற்றும் காவல் துறை இணைந்து நடத்தும் இமைகள் திட்டம் 

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி நர்சிங் கல்லூரியில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் M.S.முத்துசாமி இ.கா.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V கிரண் ஸ்ருதி இ.கா.ப., தலைமையில் நடைபெற்றது.மேலும் இக்கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பது குறித்தும், அதைச் சார்ந்த சட்டங்கள் குறித்தும் மற்றும் குற்றம் நடவாமல் எவ்வாறு தடுப்பது குறித்தும் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசுவேசுவரய்யா,அரக்கோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் இ.கா.ப., இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, காவல் அதிகாரிகள்,முதன்மை கல்வி அலுவலர் ப. உஷா, மாவட்ட கல்வி அலுவலர் R.பிரேமலதா , கல்லூரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.