Type Here to Get Search Results !

மேச்சேரியில் 76-அடி நீள பிரமாண்ட தேசிய கொடி பேரணி

மேச்சேரியில் 76-அடி நீள பிரமாண்ட தேசிய கொடி பேரணி

மேட்டூர்:சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 76 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடி பேரணி முன்னாள் முப்படை வீரர்கள் சார்பில் நடைபெற்றது.பேரணிஇப்பேரணியை மேட்டூர் டி.எஸ்.பி. மரியமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் ராணுவ வீரர்கள், தனியார் கல்லூரியை சேர்ந்த 1000- க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தேசிய கொடியை இருபுறமும் சுமந்து பேரணியாக சென்றனர். இந்த பேரணி மேச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி பஸ் நிலையம் ,தேர் வீதி, கால்நடை சந்தை உள்ளிட்ட முக்கிய வீதியில் வழியாகச் சென்று மீண்டும் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை வந்தடைந்தது. மாணவிகள் தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு சென்றனர். பிரமாண்டமாக நடைபெற்ற 76-வது சுதந்திர தின கொடி அணிவகுப்பு பேரணியில் ஏராளமான பொதுமக்களும் உற்சாகமாக கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.இந்த பேரணிக்கு பாதுகாப்பாக காவல் துறையினரும் காவல்துறை வாகனங்கள் அவசர ஊர்திகள் பின் தொடர பேரணி முடிவடைந்தது. தேசியக்கொடியை நங்கவள்ளியை சேர்ந்த தறி தொழிலாளி செந்தில்குமார் வடிவமைத்தார்.பேரணியில் முன்னாள் முப்படை குடும்ப நல சங்கத்தின் சார்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.