Type Here to Get Search Results !

சுமைப்பணி தொழிலாளர்களின் கால வரையற்ற வேலை நிறுத்தம் எட்டாம் நாள் தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெறும்

சுமைப்பணி தொழிலாளர்களின் கால வரையற்ற வேலை நிறுத்தம் எட்டாம் நாள் தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெறும்
-----------------------
*ஈரோடு மாவட்ட அனைத்து சுமைப்பணி தொழிலாளர்களின் கால வரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா தொடர் போராட்டம்.*ஈரோட்டி
ல் உள்ள லாரி புக்கிங் மற்றும் டெலிவரி குடோன்களில் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.6 வருடங்களாக கூலி உயர்வு வழங்கப்படாததை கண்டித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஈரோடு பார்க் ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் சரக்கு லாரி புக்கிங் சங்க நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நேற்று தினம் மாலையில் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் தங்களது தரப்பு விளக்கத்தை அமைச்சரிடம் தெரிவித்தனர். இருதரப்பு விவரங்களையும் கேட்டறிந்த பிறகு லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் தரப்பில் 6 பேரும், தொழிற்சங்க நிர்வாகிகள் 6 பேரும் பொது நபராக ஒரு வக்கிலும் என 13 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் இந்த குழுவின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.இந்த குழுவினர் நேற்று அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொழிற்சங்கம் சார்பிலும், லாரி டிரான்ஸ்போர்ட் சார்பிலும் அமைக்கப்பட்ட குழுவில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது லாரி டிரான்ஸ்போர்ட் நிர்வாகம் சார்பில் தொழிலாளர்கள் கேட்ட ஊதிய உயர்வில் இருந்து பாதி தருவதாக கூறினர். ஆனால் முழு தொகையை வழங்க வேண்டும் என்று தொழிலா ளர்கள் வலியுறுத்தினார். இதனால் பேச்சு வார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறியாக இருப்பது. இதனையடுத்து இன்று மாலை மீண்டும் இரு தரப்புக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 8-வது நாளாக நீடித்து வருகிறது. இன்று ஸ்டார் தியேட்டர் அருகே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்ட தர்ணா போராட்டம் நடைபெற்றது.தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் ஈரோட்டில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், எண்ணெய் வகைகள் அனுப்ப முடியாமல் குடோன்களில் தேங்கி இருக்கின்றன. கிட்டத்தட்ட ரூ.700 கோடி மதிப்பிலான சரக்குகள் தேங்கி கிடப்பதால் லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்கள் அவதி அடைந்துள்ளனர். இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்படுமா? என எதிர்பா ர்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.