ஈரோட்டில் இருந்து வாரம் தோறும் வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஈரோடு மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர் உள்பட பல்வேறு ஊர்களுக்கு ஏற்கனவே பல பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த வழித்தடங்களில் வார இறுதி நாட்களில் கூடுதலாக 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்என ஈரோடு மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.