Type Here to Get Search Results !

2000 ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறி, 35 லட்சம் ரூபாயை கொள்ளை யடித்தகும்பால் கார்கொள்ளையர்களில் ஏற்கனவே 1ஒருவர் கைது செய்துள்ள மொடக்குறிச்சி போலீசார்கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்ட விவசாயிடம் 2000 ரூபாய் நோட்டுகளை தருவதாக கூறி, 35 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த 7 பேர் கொண்ட கார் கொள்ளையர்களில் ஏற்கனவே 1ஒருவர் கைது செய்துள்ள மொடக்குறிச்சி போலீசார், மேலும் மாதேஷ் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து கட்டுக்கட்டாக போலியான வெள்ளைத் தாள் கொண்ட ரூபாய் நோட்டுகள், தங்க காசுகள், தராசு, போலியான போலீஸ் உடை, பத்துக்கு மேற்பட்ட காரின் நம்பர் பிளேட்டுகள் மற்றும் ஸ்வீப்ட் கார் ஒன்றை மொடக்குறிச்சி போலீசார் பறிமுதல் செய்தனர். 
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்த பூசாரி கருப்பு மகன் சிவாஜி, விவசாயி. இவருக்கு தேனி மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள காலப்பண்பட்டி லோகேந்திரன் மகன் பாண்டி என்பவர் தனது உறவினர் செந்தில் மூலம் அறிமுகமாகியுள்ளார். சிவாஜியிடம் பாண்டி என்பவர் ஈரோட்டில் எனக்கு தெரிந்த ராஜ்குமார் என்ற நபரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் உள்ளன 35 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் 50 லட்சம் ரூபாய், 2000 ரூபாய் நோட்டுக்களை வழங்குவதாக பாண்டி தெரிவித்து ள்ளார். இதனை நம்பிய சிவாஜி நமக்கு மேலும் 15 லட்சம் ரூபாய் பணம் கமிஷனாக கிடைப்பதாக நம்பி 35 லட்சம் ரூபாயை தனது வங்கி கணக்கில் இருந்து எடுத்துக்கொண்டு உறவினர்கள் செந்தில் மாதேஷ் குமார் மற்றும் டிரைவர் குபேந்திரன் ஆகியோருடன் லக்காபுரம் அருகே உள்ள பரிசல் துறைக்கு வந்தடைந்தார். 

இங்கு வந்தவுடன் ராஜ்குமார் என்பவருக்கு சிவாஜி தகவல் தெரிவித்தார். பின்னர் ராஜ்குமார் இரண்டு நபர்களுடன் வந்து சிவாஜியை சந்தித்து பணம் தருவதாக கூறி தனது காரில் சிவாஜியையும் சிவாஜி உறவினர் செந்தில் இருவரையும் ஏற்றுக் கொண்டு பரிசல் துறையில் இருந்து பெருந்துறை நோக்கி புறப்பட்டார். கார் சிறிது தூரம் சென்றவுடன் எதிரே டாட்டா சுமோ காரில் இருந்த நான்கு நபர்கள் ராஜ்குமாரின் காரை வழிமறித்து, நாங்கள் அரசு அதிகாரிகள் எனக் கூறி காரில் இருந்த சிவாஜி மற்றும் சிவாஜியின் உறவினர் செந்தில் ஆகிய இருவரையும் கீழே இறக்கி விட்டனர். இதனை அடுத்து ராஜ்குமார் காரில் ரூ.35 லட்சம் ரூபாய் வைத்திருந்த பணத்தோடு அந்த ஏழு பேர் கொண்ட கும்பல் மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்றது. 

தான் ஏமாற்றப்பட்டதாக அறிந்த சிவாஜி, எனது பணம் 35 லட்சத்தை மீட்டுத் தருமாறு மொடக்குறிச்சி போலீசில் கடந்த ஐந்தாம் தேதி இரவு புகார் அளித்தார். புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் மொடக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையில் உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டது.

விவசாயிடம் பணம் பறித்த கார் கொள்ளையர்கள் குறித்து மொபைல் எண்களைக் கொண்டும் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா வைத்து மொடக்குறிச்சி போலீசார் தீவிர புலனாய்வு விசாரணை மேற்கொண்டனர். 

இதனை அடுத்து கரூர் மாவட்டம் நாகம்பள்ளி அரசு மருத்துவமனை அடுத்த போஸ்ட் ஆபீஸ் தெரு, மலைக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் ராஜேந்திரன் என்பவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மொடக்குறிச்சி போலீசார் நேற்று கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் கொள்ளையர்களில் ஒருவரான அரசு அதிகாரி போல் போலியான போலீஸ் படை அணிந்து நடித்த நாமக்கல் மாவட்டம் வேலூர் அடுத்த போத்தனூர் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கட்டான் மகன் மாதேஷ் என்பவரை நேற்று இரவு பாசூரில் பதுங்கி இருந்த பொழுது ஈரோடு நகர குற்றப்பிரிவு மற்றும் மொடக்குறிச்சி போலீஸ் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.  

மாதேஷிடம் போலீசார் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் மாதேஷ் என்பவர் ஸ்விப்ட் கார் மூலம் பணம் கொள்ளையடிக்க காரை பயன்படுத்தி வந்ததாக தெரிவித்துள்ளார். காரில் பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டியதுடன், தன்னை பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிவதாக போலி அடையாள அட்டைகள் வைத்திருந்து தன்னை அடையாளப்படுத்தி பல இடங்களில் தப்பித்து வந்துள்ளார். இந்த காருக்கு போலீசில் எங்கும் சிக்காதவாறு பத்துக்கும் மேற்பட்ட நம்பர் பிளேட்டுகள் மற்றும் காரையும் பயன்படுத்தியதை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கட்டு கட்டு ஆக வெள்ளை தாள் கொண்ட போலியான ரூபாய் நோட்டுகள், போலியான தங்க நகைகள், தராசு மற்றும் எடை கற்கள், போலியான போலீஸ் உடை, உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மாதேஷிடம் தீவிர புலனாய்வு விசாரணை மேற்கொண்டு வரும் மொடக்குறிச்சி போலீசார் மேலும் தலைமறைவாக உள்ள நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.