போலீசார் விசாரணை
ஈரோடு, ஜூன்.20 -
ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஓ.ஏ ராமசாமி வீதி அமைந்துள்ளது.இந்த பகுதியில் சின்னையா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் இவரது வீட்டுக்குள் புகுந்து கட்டிட தொழிலுக்கு பயன்படுத்தும் கட்டையால் கதவை உடைக்க முயற்சி செய்துள்ளார். சத்தம் கேட்டு சின்னப்பா திடுக்கிட்டு எழுந்தார். மேலும்
அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டுக்கு வந்தனர். அக்கம்பக்கத்தினர்.அப்போது வீட்டு முன்பு ஒருவர் நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் திருட வந்திருப்பார் என நினைத்து அக்கம் பக்கத்தினர் அந்த நபரை பிடித்து வைத்தனர்.
பின்னர் இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் மதுபோதையில் முன்னுக்கு பின் முரணாக பதில் பேசினார். .அந்த நபர் கொள்ளையடிக்க வந்தாரா?அல்லது அவர் மது போதையில் தெரியாமல் வீட்டிற்குள் அத்துமீது நுழைந்து விட்டாரா என தெரியவில்லை. போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.