Type Here to Get Search Results !

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு இன்று 2,400 வாக்கு பதிவு எந்திரங்கள் வருகை

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு
ஈரோடு மாவட்டத்திற்கு இன்று 2,400 வாக்கு பதிவு எந்திரங்கள் வருகைபாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதையொட்டி அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாராளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கு அனுப்பும் பணி தீவிர படுத்தப்பட்டு வருகிறது. இதன் படை பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி இன்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் பெல் நிறுவனத்தில் இருந்து 2,400 வாக்குப்பதிவு எந்திரங்கள் வேனில் கொண்டு வரப்பட்டது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திர குடோனில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல்கள் கலைக்கப்பட்டு இறக்கி வைக்கப்பட்டன. உள்ளே மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களில் கொண்டு அடுக்கி வைக்கப்பட்டன. 
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, 
அடுத்த வருடம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளன அதன்படி இன்று கர்நாடக மாநிலம் பெங்களூரு பெல் நிறுவனத்தில் இருந்த ஈரோடு மாவட்ட பாராளுமன்ற தொகுதி தேர்தலுக் காக 2,400 வாக்குபதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் 1400 பெல்லட் எந்திரங்களும், ஆயிரம் கட்டுப்பாட்டு கருவி எந்திரங்களும் அடங்கும். இந்த வாக்குபதி மந்திரங்கள் தான் ஈரோடு பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளது என்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.