பக்ரீத் பண்டிகையையொட்டி
ஈரோடு மாவட்டத்தில்
பக்ரீத் பண்டிகையையொட்டி ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் அமைந்துள்ள ஈத்கா தொழுகை மைதானத்தில் இன்று காலை ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர். இதே போல ஈரோடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் பள்ளிவாசல், ரயில்வே காலனி பள்ளிவாசல், வளையல்கார வீதி பள்ளிவாசல், கருங்கல்பாளையம் பள்ளிவாசல், ஓடைப்பள்ளம், கருங்கல்பாளையம், எல்லப்பாளையம், கொக்கராயன்பேட்டை,கொல்லம்பாளையம், மாணிக்கம்பாளையம், வெண்டிபாளையம், நஞ்சப்பாநகர், பி.பெ.அக்ரஹாரம், பூம்புகார்தோட்டம், விவிசிஆர், திண்டல், ஆர்என்புதூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. பெரியார் நகர் பகுதியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது.இதே போல மாவட்டத்தில் கோபி, சத்தி, பவானி, பவானிசாகர், பெருந்துறை, நம்பியூர், புளியம்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றதோடு, ஈகை திருநாளை கொண்டாடும் வகையில், ஏழைகளுக்கு குர்பானி இறைச்சி வழங்கப்பட்டது.