Type Here to Get Search Results !

ஆனி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையை யொட்டி, நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.

ஆனி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையை யொட்டி, நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.
ஆனி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையை யொட்டி, நாமக்கல் ஆஞ்சனேய சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சனேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இங்கு, அனுமன் ஜெயந்தி, தீபாவளி, பொங்கல் பண்டிகைகள், அமாவாசை, பௌர்ணமி மற்றும் தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் ஆஞ்சனேயருக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

அதன்படி, ஆனி மாத முதல் ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.