Type Here to Get Search Results !

ஈரோட்டில் கயிறு திரிக்கும் நார்கள் மற்றும் மிஷின்கள் திடீர் தீ விபத்து எரிந்து சேதம்

ஈரோட்டில் கயிறு திரிக்கும் நார்கள் மற்றும் மிஷின்கள் திடீர் தீ விபத்து எரிந்து சேதம்

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட அசோகபுரம் நேரு வீதியைச் சேர்ந்தவர் சின்னசாமி 53. இவருக்கு வெண்டிபாளையம் அடுத்த காந்திபுரம் அருகில் உள்ள பால தண்டாயுத வீதியில் கயிறு திரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். நேற்று மாலை கயிறு திரிக்கும் கம்பெனியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து மொடக்குச்சி மற்றும் ஈரோடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒன்பது பேர், 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் கயிறு திரிக்கும் நார்கள்மற்றும் மிஷின்கள் எரிந்து சேதம் ஆகின. தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்புத் துறையின் முதல் கட்ட தகவல் அறிக்கையில் அருகிலுள்ள நிலத்தில் புற்கள் மற்றும் செடி கொடிகள் பற்றி எரிந்ததால் அருகில் உள்ள கயிறு திரிக்கும் கம்பெனிக்கு தீயும் பரவி பற்றி கொண்டது என தெரிவித்தனர். தீயில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நார்கள் மற்றும் மெஷின்கள் சேதம் அடைந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.