Type Here to Get Search Results !

காஞ்சிக்கோயில் நான்கு வீதி வழியாக பல்லாயிரக்கணக்கான எடுத்துவரப்பட்டு தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, காஞ்சிக்கோயில் கனககிரி ஸ்ரீகுமரன் மலை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 07.04.2023 வெள்ளிக்கிழமை காசி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், தலைக்காவேரி, பவானி தீர்த்தங்கள் தீர்த்த குடங்கள் விமர்சையாக காஞ்சிக்கோயில் நான்கு வீதி வழியாக பல்லாயிரக்கணக்கான எடுத்துவரப்பட்டு தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று 08.4.2023 சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் மகா கணபதி ஹோமம் கோயில் வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பின்பு சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் முதல் கால வேள்வி யாகம் காஞ்சிக்கோயில் ஈசான சிவப்பிரகாச சிவாச்சாரியார் குருக்கள் தலைமையில் வேள்வி யாகம் சிறப்பாக நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நாளை 9.04.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் 2ம் கால வேள்வி யாகம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் மூன்றாம் வேள்வி யாகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து திங்கட்கிழமை 10.4.2023 காலை 8.00 மணியளவில் நான்காம் கால பூஜை நடைபெற உள்ளது.அதனைத் தொடர்ந்து 9.00 மணியளவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்நிகழ்வுகளுக்கு சிவகிரி ஆதீன குலகுரு அவர்கள் தலைமையேற்று சிறப்பாக நடத்திக் கொடுக்க உள்ளார்கள்.விழா ஏற்பாடுகளை காஞ்சிக்கோவில் ஸ்ரீகுமரன் மலை நலச் சங்கம் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.