திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகனின் நினைவு நாள் ஈரோட்டில் இன்று அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சரும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் அன்பழகனின் மூன்றாவது ஆண்டு நினைவு தினம் ஈரோட்டில் அனுசரிக்கப்பட்டது.
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, முகாம் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்
தொடர்ந்து மாநில மாவட்ட நிர்வாகிகள் பலரும் அன்பழகன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். உடன் ஆர்.செந்தில்குமார், வி.சி.நாடராஜன்,
ஈரோடு மண்டல தலைவர்பி.கே.பி பழனிச்சாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்