Type Here to Get Search Results !

ஈரோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பாக மாவட்ட மாநகர தலைவி ஞானதீபம் தலைமையில் தீப்பந்தம் ஏத்தி பேரணி நடைபெற்றது

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. இதனைத்தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில தலைவி வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலின்படிஈரோட்டில் மகிளா காங்கிரஸ் சார்பாக

ஈரோட்டில் ராகுல்காந்தியின் எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மோடி சாதிப்பெயர் குறித்து அவதூறாக பேசியதாக, சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்து, 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நீதிமன்ற தீர்ப்பையடுத்து, வயநாடு மக்களவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தியைத் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தனர். இதனையடுத்து ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர்,பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கையில் தீப்பந்தம் ஏந்தியபடி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர், ராகுல்காந்தி குற்றவாளி என்ற சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்தும், பதவியை தகுதி நீக்கம் செய்த பாஜக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட மாநகர தலைவி ஞானதீபம் தலைமையில் தீப்பந்தம் ஏத்தி பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் முன்னிலை வகித்தார். மேலும் மாவட்ட சிறுபான்மை துறை துணை தலைவர் கே.என். பாஷா,மகிளா காங்கிரஸ் கட்சியின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.