தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான மறைந்த திருமகன் ஈவெராஇல்லமான ஈரோடு குடியரசு இல்லத்திற்குவருகை புரிந்து அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின் அவரது தந்தை முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களை பாண்டிச்சேரி முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வடகிழக்கு பகுதி பொறுப்பாளருமான வி. நாராயணசாமி மற்றும் பாண்டிச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ வி சுப்பிரமணியம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் குலாம் மொய்தீன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறிய போது*.!
கவர்னர்கள் மத்திய நரேந்திர மோடி அரசின் கைப்பாவையாக செயல்பட்டு எதிர்மறையான அரசியலை செய்கின்ற வேலையை பார்க்கின்றனர். கவர்னருக்கு என்று சில அதிகாரம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் டாக்டர் அம்பேத்கரால் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை கவர்னர் மீறி செயல்படுவது ஜனநாயகத்திற்கு புறம்பானது. கவ ர்னர் தான் ஒப்புதல் அளித்த உரையை படிக்காமல் தன்னிச்சையாக தன்னுடைய உரையை அவர் படித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
பல கவர்னர்கள் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்புதல் அளித்த உரையை தான் படித்தார்களே தவிர இதுபோன்ற ஒரு தரம் கெட்ட வேலையை எந்த கவர்னரும் செய்யவில்லை. இதை கவர்னர் ரவி செய்திருக்கின்றார். கவர்னராக இருக்க அவர் தகுதி அற்றவர். எனவே உடனடியாக அவரை தகுதி நீக்கம் செய்வதற்கு தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.என்று கூறினார்