ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஈரோடு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில்மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்டஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு2023 பிப்ரவரி 27 திங்கட்கிழமை அன்று இடைத் தேர்தல் வாக்குப்பதிவும்..,
இதற்கு தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி இருப்பார் என்றும்
*மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று அறிவித்துள்ளார்.*
மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்....
எனவே
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளது.
ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் (19.01.2023) ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள்
98 - ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணியினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, 98 - ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகின்ற 27-02-2023 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகின்ற 31-01-2023 அன்று தொடங்கி 07-02-2023 அன்று வரைநடைபெறும். 08-02-2023 அன்று பெறப்பட்ட வேட்புமனுக்களின் மீது பரிசீலனை நடைபெறும். 10-02-2023 அன்று வேட்புமனு வாபஸ் நடைபெறும். 27-02-2023 அன்று வாக்குப்பதிவு நடைபெற்று பதிவான வாக்குகள் 02-03-2023 அன்று எண்ணப்பட உள்ளன. மேலும், வாக்குப்பதிவின்போது,வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் வி.வி.பேட் ஆகிய இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பொறியாளர்கள் மூலம் நடைபெறுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து பணிகளும் நடைபெறும் என தெரிவித்தார்.
ஈரோடு,கோயம்புத்தூர், திருப்பூர்
கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டார பகுதி விநியோகஸ்தர்களுக்கு தேர்தல் ஆணையம் பறக்கும் படை அறிவுறுத்தல்இந்த நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினிசந்திரா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதிஷ்குமார், வட்டாட்சியர்கள் சிவகாமி (தேர்தல்), பாலசுப்ரமணியம் (ஈரோடு), அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.