Type Here to Get Search Results !

ஈரோடுவழியாகபழனிக்குஆயிரக்கணக்கானபக்தர்கள்பாதயாத்திரைபோக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

ஈரோடுவழியாகபழனிக்குஆயிரக்கணக்கானபக்தர்கள்பாதயாத்திரைபோக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
ஈரோடு, ஜன. 16 -
தைப்பூச விழா அடுத்த மாதம் பிப்ரவரி 5ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு ஆயிரகணக்கான மக்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளிலிருந்து கடந்த சில நாட்களாக பழனிக்கு நூற்றுக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர். இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி, தாரமங்கலம், ஓமலூர், மகுடன்சாவடி, சங்ககிரி, குமாரபாளையம், பள்ளிபாளையம் வெப்படை போன்ற பகுதிகளில் இருந்து இன்று அதிகாலை முதலை பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். சிறுவர் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதம் இன்றி அனைவரும் நடந்து சென்றனர். இன்று வழக்கத்தை விட பணி கடுமையாக இருந்தது. எனினும் பணியை பொறுப்பெடுத்தாமல் மக்கள் பாதை அப்படியாக சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் இன்று ஈரோடு கண்கள் பாளையம் காவிரி சோதனை சாவடி முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.பாதயாத்திரைக்கு சென்ற மக்கள் காளிங்கராயன் வாய்க்காலில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பாதயாத்திரை செல்லும் மக்களுக்கு வழி நெடுகிலும் ஆங்காங்கே அன்னதானமும், குடிநீர் பாட்டிலும் மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.