ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஆருத்ரா தரிசன மகா வைபவம் விழா கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. அன்று தினம் திருவெம்பாவை மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெற்றது. இது தொடர்ந்து நேற்று அதிகாலை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. பிச்சாண்டவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. உச்சிக்கால பூஜை நடைபெற்ற பிறகு பிச்சாண்டவர் புறப்பாடு வீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீவாரு ணாம்பிகா சமேத ஆருத்ரா கபாலீஸ்வர பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் ஸ்ரீ சிவகாமி அம்பிகை சமேத ஸ்ரீ நடராஜர் பெருமாளுக்கு ஆருத்ரா அபிஷேகம் தொடர்ந்து ஆருத்ரா தரிசன வைபவம் நடைபெற்றது. இதில் நெய் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், பஞ்சாமிர்தம் அபிஷேகம் உட்பட 14 திரவியங்கள் ஆன அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 63 நாயன்மாருக்கும் அபிஷேகம், மகாதிபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. ஈஸ்வரன் கோயில் வழியாக மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க், காமராஜர் வீதி வழியாக மீண்டும் கோவிலில் திருவீதி உலா வந்து நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஆருத்ரா தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது