Type Here to Get Search Results !

ஈரோட்டில் பரிதாபம்வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

ஈரோட்டில் பரிதாபம்வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை 
ஈரோடு, ஜன.11 -
ஈரோடு வி.வி. சி. ஆர். நகர், 1-வது தெருவை சேர்ந்தவர் சசிந்திரன்(24). திருச்செங்கோட்டை சேர்ந்த ஒரு பெண்ணை சசிந்திரன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.  கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் சசீந்திரன் மனைவி அடிக்கடி கணவரிடம் கோபித்து கொண்டு அவர்கள் தாயார் வீட்டுக்கு சென்று விடுவார். இந்நிலையில் சசிந்திரனின் குடிப்பழக்கத்தை காரணம் காட்டி அவருடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.  ஏற்கனவே  மனைவி, குழந்தைகளை பிரிந்த சோகத்தில் இருந்த சசிந்திரன் விவாகரத்து நோட்டீசால்  மேலும் அதிர்ச்சி அடைந்தார், இதனால் விரக்தியில் இருந்த சசிந்திரன் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.