Type Here to Get Search Results !

ஈரோடு மாநகராட்சி 28-வது வார்டு கோட்டை மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பினை வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதூகாப்புத் துறை சார்பில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களின் ஆணைக்கிணங்க ஈரோடு மாநகராட்சி 28-வது வார்டு கோட்டை பகுதியில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார். உடன் திமுக கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.