Type Here to Get Search Results !

மாநகராட்சி 2-ம் மண்டல தலைவர் காட்டு சுப்பு (எ) சுப்பிரமணியம் முன்னிலையில், ஈரோடு மாநகராட்சி 12-வது வார்டில் மாமன்ற உறுப்பினர் ஆ.ஜெகதீசன் பொங்கல்பரிசு தொகுப்பினைவழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதூகாப்புத் துறை சார்பில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி  ஆணைக்கிணங்க ஈரோடு மாநகராட்சி 12-வது வார்டில் மாநகராட்சி 2-ம் மண்டல தலைவர் காட்டு சுப்பு (எ) சுப்பிரமணியம் முன்னிலையில், ஈரோடு மாநகராட்சி 12-வது மாமன்ற உறுப்பினர் ஆ.ஜெகதீசன் அப்பகுதி பொதுமக்களுக்கு தைப்பொங்கலுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.