Type Here to Get Search Results !

ஈரோடு மாநகராட்சி 18-வது வார்டில், மாநகராட்சி 2-ம் மண்டல தலைவர் காட்டு சுப்பு (எ) சுப்பிரமணியம் பொது மக்களுக்கு தைப்பொங்கலுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதூகாப்புத் துறை சார்பில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி-சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி  அறிவுரையின்படி ஈரோடு மண்டலம் 2-ல் மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட், ஈரோடு மாநகராட்சி 18-வது வார்டில், மாநகராட்சி 2-ம் மண்டல தலைவர் காட்டு சுப்பு (எ) சுப்பிரமணியம் அப்பகுதி பொது மக்களுக்கு தைப்பொங்கலுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.