ஈரோடு மாநகராட்சி 18-வது வார்டில், மாநகராட்சி 2-ம் மண்டல தலைவர் காட்டு சுப்பு (எ) சுப்பிரமணியம் பொது மக்களுக்கு தைப்பொங்கலுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.
January 09, 2023
0
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதூகாப்புத் துறை சார்பில் தமிழர் திருநாள் தைப் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி-சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1000/- ரொக்கம் ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிவுரையின்படி ஈரோடு மண்டலம் 2-ல் மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட், ஈரோடு மாநகராட்சி 18-வது வார்டில், மாநகராட்சி 2-ம் மண்டல தலைவர் காட்டு சுப்பு (எ) சுப்பிரமணியம் அப்பகுதி பொது மக்களுக்கு தைப்பொங்கலுக்கு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
Tags