Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்டம் நியாயவிலைக் கடைகளைதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர்.எஸ்.பிராபகர் திடீர் ஆய்வு

 *ஈரோடு மாவட்டம்  நியாயவிலைக் கடைகளைதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர்.எஸ்.பிராபகர் திடீர் ஆய்வு*


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர்.எஸ்.பிராபகர் ஈரோடு மாவட்டம் சேனாதிபதிபாளையத்தில் அமைந்துள்ள வட்டக்கிடங்கு மற்றும் நியாயவிலைக் கடைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் சேனாதிபதிபாளையத்தில் அமைந்துள்ள வட்டக்கிடங்கு மற்றும் நியாயவிலைக் கடைகளை 
 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் டாக்டர்.எஸ்.பிராபகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், ஈரோடு சேனாதிபதிபாளையம் பகுதியில் அமைந்துள்ள வட்ட செயல்முறை கிடங்கு மற்றும் சாக்குக்கிடங்கு ஆகியவற்றையும், ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள அமுதம் நியாயவிலை க்கடைகள் எண் -2 மற்றும் எண்-7 ஆகியவற்றை திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில்உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் தரத்தினையும் மற்றும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளையும் ஆய்வு செய்தார். மேலும், ஈரோடுசேனாதி பதிபாளையம் 
கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, ஈரோடு மண்டல மேலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்) முருகேசன், துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) மனோகரன், ஈரோடு வட்ட வழங்கல் அலுவலர் அன்னபூரணி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.