Type Here to Get Search Results !

பிரதமர் மோடிதாயாரின் உடலுக்கு அஞ்சலி

 பிரதமர் மோடிதாயாரின் உடலுக்கு அஞ்சலி
குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள இல்லத்தில் தாயார் ஹீராபென் மோடியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(டிச.30) காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 100.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தாயார் மறைவையடுத்து ஆமதாபாத் வந்த பிரதமர் மோடி, காந்தி நகரில் உள்ள இல்லத்தில் தாயாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து ஹீராபென் மோடியின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. இன்றைய தினமே இறுதிச்சடங்கும் நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.