Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் "எண்ணும் எழுத்தும்" திட்டத்தின் கீழ் செயல்படும் மாதிரி வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு*

*ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் "எண்ணும் எழுத்தும்" திட்டத்தின் கீழ் செயல்படும் மாதிரி வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி   ஆய்வு*,


ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் "எண்ணும் எழுத்தும்" திட்டத்தின் கீழ் செயல்படும் மாதிரி வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி    ஆய்வின்போது
தமிழ்நாடு முதலமைச்சர் திருவள்ளூர் மாவட்டம், புழல் ஒன்றியம், அழிஞ்சியாக்கம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், 2022-23ஆம் கல்வியாண்டு முதல், தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்புவரை பயிலும் பாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட இருக்கும் "எண்ணும் எழுத்தும்” என்ற முன்னோடித் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்பான காணொலி, கைபேசி செயலி, திட்டப்பாடல் ஆகியவற்றை வெளியிட்டு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆசிரியர் கையேடு, சான்றிதழ், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கினார்கள்.

கொரோனா பெருந்தொற்றினால் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் 19

மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டு, வருப்புகள் இல்லாத நிலையில் மானாவர்களின் கற்றலில்'

மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக, தமிழ்நாடு அரசு, 2022-23ஆம் கல்வியாண்டு 1,3 ஆண்டுகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின்படி, 2025-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள
8 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பெருந்தொற்றினால் தொடக்க வகுப்புகளில் குறிப்பாக 1 முதல் 3-ஆம்
வகுப்புக் குழந்தைகள், தங்கள் வகுப்பிற்குரிய கற்றல் நிலையை அடைந்திருக்கவில்லை,
எடுத்துக்காட்டாக, மூன்றாம் வகுப்புக் குழந்தைகள், இரண்டாம் வகுப்புக்குரிய கற்றல்
அடைவைப் பெறவில்லை. இரண்டாம் வகுப்புக் குழந்தைகள் முதல் வகுப்புக்குரிய கற்றல்

அடைவைப் பெறவில்லை. இவ்வாறாக, 19 மாத இடைவெளிக்குப் பிறகு, குழந்தைகள், அந்தந்த வகுப்பிற்குரிய திறர்களைப் பெறாமலே வகுப்பை நிறைவு செய்து உள்ளனர். எனவே குழந்தைகள் இழந்த கற்றலைப் பெறுவதற்கு உதவியாகப் பள்ளிக் கல்வித்துறையின் முன்னோடித் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டம், கற்றல் நிலைக்கேற்பக் கற்பித்தல் Teaching at the Right Level (TARL.) என்ற அணுகுமுறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப எண்ணும் எழுத்தும் திட்டத்தில் அரும்பு, மொட்டு, மலர் என்னும் பெயர்களில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களுக்கு சூழ்நிலையியல் பாடத்திறன்களையும் ஒருங்கிணைத்து முதல்முறையாக நிலைவாரியான பயிற்சிநூல்கள் (Level Based Workbooks) உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளன. இப்பயிற்சி நூல்கள் வாயிலாக மூன்றாம் வகுப்புக் குழந்தைகள், 1 மற்றும் 2-ஆம் வகுப்புகளுக்கான பாடத்திறன்களையும் இரண்டாம் வகுப்புக் குழந்தைகள், முதல் வகுப்புக்கான பாடத்திறனையும் அடைவதற்கான வாய்ப்பைப் பெறுகின்றனர். இப்பயிற்சி நூல் செயல்பாடுகளைக் குழந்தைகள் செய்து கற்பதற்கு வழிகாட்டியாக உதவும் வகையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்குப் பாடங்களைக் கற்பிப்பதற்கான தெளிவான, விரிவான விளக்கங்களுடன் கூடிய ஆசிரியர் கையேடுகளும் முதல்முறையாக உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளன.மேலும், பாடவாரியாக உருவாக்கப்பட்டுள்ள ஆசிரியர் கையேடுகளும் பயிற்சி நூல்களும் ஒவ்வொரு குழந்தையும் தனக்குத் தெரிந்த கற்றல் நிலையிலிருந்து படிப்படியாகத் தனது கற்றலை வளர்த்துக் கொண்டு செல்ல உதவும். மேலும், குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில் எண்ணும் எழுத்தும் வகுப்பறையில், பாடல் கலம், கதைக் களம், செயல்பாட்டுக் களம், படைப்புக் களம், படித்தல் களம் மற்றும் பொம்மலாட்டக் களம் போன்றவை அமைக்கப்பட்டு குழந்தைகளின் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் சுற்றல், கற்பித்தல் நடைபெறுகிறது. இதனால், குழந்தைகளுக்குப் பிடித்தான கதைகள், பாடல்கள், விளையாட்டுகள், புதிர்கள், கலைகள் மற்றும் கைவினைப் பொருள்களால் எண்ணும் எழுத்தும் வகுப்பறைகள் நிறைந்துள்ளது.

எண்ணும் எழுத்தும் வகுப்பறையின் செயல்பாடுகள், குழந்தைகள், கவனச்சிதறல் இன்றிப் பங்கேற்றுக் கற்கவும் துணைக்கருவிகளின் (Teaching Learning Materials) உதவியுடன் பாடங்களைப் புரிந்து ஆர்வமுடன் கற்கவும் உதவும் வகையில் வேடிவமைக்கப்பட்டுள்ளன. இவை குழந்தைகள், தனியாகவும் இணைந்தும் குழுவாகச் சேர்ந்தும் அச்சமியன்றிக் கற்க உதவிபுரியும். மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்தில், ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் கல்வி நிருவாகக் கண்காணிப்பும் விளையாட்டு வழி மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. "எண்ணும் எழுந்தும்" திட்டத்தின் அனைத்துக் கூறுகளையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம், 2025ஆம் ஆண்டிற்குள் எட்டு வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றிப் படிக்கவும் எழுதவும் அடிப்படைக் கணக்குகளைச் செய்யவுமான எழுத்தறிவையும் மற்றும் எண்ணறிவையும் பெறமுடியும்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள்,   பள்ளிகள் என மொத்தம் 1189

பள்ளிகளைச் சார்ந்த 37718 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். தொடர்ந்து பொடக்குறிச்சி வட்டம், அவல்பூந்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியில் "எண்ணும் எழுத்தும்" மாதிரி வகுப்பறையினை பார்வையிட்டு அனைத்து குழந்தைகளுக்கும் கணிணியில் பயில அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மாணவ, மாணவியர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்து, தொடர்ந்து 5 நாட்களாக பள்ளிக்கு வராத மாணவ, மாணவியர்களை கண்டறிந்து தொடரந்து பள்ளிக்கு வருகை புரிவதற்கு பெற்றோர்களுக்கு ஆலோசனைகளை வழங்குமாறும் மற்றும் பள்ளி வளாகத்தில் சிறிய காய்கறி தோட்டம் ஒன்று அமைக்குமாறும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்தினார்.

மேலும், அப்பள்ளியில் அமைந்துள்ள சமையலறை கூடத்தினையும் ஆய்வு செய்து,

பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துனாவு உணவுகளை உண்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது, அவல்பூந்துறை பேரூராட்சி தலைவர்

மொடக்குறிச்சி வட்டாட்சியர் சண்முகசுந்தரம்,
ஊரக வளர்ச்சித் 3/3 பொறியாளர் ரமேஷ், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சகதவேல், சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட பலர் உடன் இருந்தனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.