Type Here to Get Search Results !

திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் திரும்ப முடியாமல் நின்ற கன்டெய்னர் லாரி 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் நடுரோட்டில் திரும்ப முடியாமல் நின்ற கன்டெய்னர் லாரி 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நடுரோட்டில் நின்ற கன்டெய்னர் லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திம்பம் மலைப்பாதை சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 கொண்ைட ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலைப்பாதை இருப்பதால் இந்த பாதை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள், கனரக வாகனங்கள் திம்பம் மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் நிற்பதும், பழுதாகி நிற்பதும், கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும், இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. நடுரோட்டில் நின்றது இந்த நிலையில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு கன்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாாியானது நேற்று காலை 9 மணி அளவில் திம்பம் மலைப்பாதையின் குறுகலான 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் திடீரென நடுரோட்டில் நின்றது. இதனால் திம்பம் மலைப்பாதையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து பாதிப்பு இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து சம்பவ இடத்துக்கு கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் பணி நடைபெற்றது. மதியம் 12 மணி அளவில் லாரி மீட்கப்பட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதையடுத்து வாகன போக்குவரத்து தொடங்கியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.