Type Here to Get Search Results !

எய்ட்ஸ்தினம் 2022 தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஈரோடு

உலக எய்ட்ஸ் தினமானது ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ஈரோடு பாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் வழிகாட்டுதலின்படி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பாக உலக எய்ட்ஸ் தினம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் உலக எய்ட்ஸ் தினத்தின் மையக்கருத்தானது "சமப்படுத்துதல்" என்பதாகும். ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்ஹெச். கிருஷ்ணானுண்ணி, தலைமையில் உறுதி மொழி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி வாசகம் அடங்கிய பதாகையில் கையொப்பமிடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நியூ இந்தியா @ 75 இயக்கம் தொடர்பாக எச்.ஐ.வி/எய்ட்ஸ், காசநோய், தன்னார்வ இரத்த தானம் தலைப்புகளில் சுவரொட்டி உருவாக்குதல் போட்டி பள்ளி மாணவர்/மாணவிகளிடையே நடைபெற்றதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. தொடர்ந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய எல்டிக்கர் ஒட்டப்பட்ட ஆட்டோ பயணத்தை துவக்கி வைக்கப்பட்டது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் தமிழ்நாடு மாநில எய்ட்னர் கட்டுப்பாடு சங்க ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் 150 கல்லூரி மாணவ/மாணவியர்கள் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களிட்டும் பேரணியில் கலந்து கொண்டனர. இதனை தொடர்ந்து இவ்விழாவிற்கு எஸ், சந்தோஷினி சந்திரா, BBA.M.A., , மாவட்ட வருவாய் அலுவலர். எஸ். மதுபாலன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை/கூடுதல் மாவட்ட ஆட்சித்தலைவர், மரு. ஆர். மணி M.D., முதல்வர், அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி (ம) மருத்துவமனை, பெருந்துறை, மரு.எஸ். சோமசுந்தரம், M.B.B.S., DPH, , துளைா இயக்குநர் சுகாதாரப்பணிகள், ஈரோடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மரு. ஆர். பிரேமகுமாரி, M.B.B.S.OG, அவர்கள், இணை இயக்குநர், நலப்பணிகள், ஈரோடு. மரு.டி.ஆர். ரவீந்திரன், MD, , துணை இயக்குநர் (தொழுநோய்), ஈரோடு. மரு.என்.என். இராஜசேகரன் M.D DCH , துணை இயக்குநர் (குடும்ப நலம்), ஈரோடு. மரு. கே.டி. கனகராஜ் M.D., DTCD அவர்கள். துணை இயக்குநர் (காசநோய்), ஈரோடு, மரு. ஈ. சாவணன்,M.D., செயலர், இந்திய மருத்துவ சங்கம், ஈரோடு. மருஜி சசிகலா, M.B.B.S., DCH , மாவட்ட குருதி மாற்று அலுவலர், ஈரோடு, மரு, அனிதாராஜ், M.D., , மருத்துவ அலுவலர், ஏ.ஆர்.டி, ஈரோடு, திருஎம். தங்கமணி M A. M.Phil,, தலைவர், ஈரோடு. மாவட்ட பாரிடில் நெட்வொர்க் ஈரோடு, தமிழ்நாடு மாநில எய்ட்சம் கட்டுப்பாடு சங்க ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் என சுமார் 400 நபர்கள் கலந்து கொண்டனர்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.