Type Here to Get Search Results !

ரூ.1 கோடிக்கு நாட்டு சர்க்கரை ஏலம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்

 ரூ.1 கோடிக்கு நாட்டு சர்க்கரை ஏலம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை  விற்பனைக்கூடத்தில்
ஈரோடு மாவட்டம்,கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1 கோடிக்கு நாட்டு சர்க்கரை ஏலம்போனது. நாட்டு சர்க்கரை கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டுச்சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4 ஆயிரத்து 900 மூட்டைகளில் நாட்டு சர்க்கரை கொண்டுவந்தனர். இதில் 60 கிலோ மூட்டை முதல் தர நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 580 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், மீடியம் ரக நாட்டுச் சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 430 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 460 ரூபாய்க்கும் ஏலம் போனது. ரூ.1 கோடிக்கு ஏலம் மொத்தம் 4173 மூட்டைகளில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 380 கிலோ எடையுள்ள நாட்டுச்சர்க்கரை 1 கோடியே 2 லட்சத்து 41 ஆயிரத்து 850 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் உருண்டை வெல்லம் 30 கிலோ சிப்பம் முதல் தரம் ஒரே விலையாக 1440 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 50 மூட்டைகளில் 1500 கிலோ எடையுள்ள உருண்டை வெல்லம் 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமாக நாட்டுச்சர்க்கரை, உருண்டை வெல்லம் ரூ.1 கோடியே 3 லட்சத்து 13 ஆயிரத்து 850 ரூபாய்க்கு பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகத்தின் சார்பாக கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.