108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து, 108ஆம்புலன்ஸ்மூலம்,
கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
108 ஆம்புலன்ஸ் கடுக்கம்பாளையம் அருகே வந்தபோது வள்ளிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்துகொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சக்திவேல் வாகனத்தை ஓரமாக நிறுத்தி மருத்துவ நுட்புநர் ரமேஷ் உதவியுடன் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது வள்ளிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நுட்புநர் M.ரமேஷ் மற்றும் வாகன ஓட்டுனர் சக்திவேல் ஆகியோரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.