Type Here to Get Search Results !

ஈரோடுபழையபாளையத்தில் ஹோண்டா கார் ஷோரூம் முற்றுகை போலி தகுதிசான்றிதழ் வழங்கியதாக புகார்…

ஈரோடுபழையபாளையத்தில் ஹோண்டா கார் ஷோரூம் முற்றுகை போலி தகுதிசான்றிதழ் வழங்கியதாக புகார்… ஈரோடு பழையபாளையத்தில் உள்ள ஹோன்டா ஷோரூமில் 2008 மாடல் ஹோண்டா சிட்டி கார் ஒன்றை 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.இவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகேயுள்ள வளையகாரபாளையத்தை சேர்ந்நவர் சண்முகசுந்தர்.யூஸ்ட் கார் விற்பனையாளரான ஷோரூம் நிர்வாகம் ஆகஸ்ட் மாதம் வாங்கிய காருக்கு தகுதிசான்று வழங்காமல் ஷோரூம் காலம்தாழ்த்தியுள்ளது. இதனால் பின்னர் ஈரோடு முகவரிக்கு பதிலாக திருச்சி முகவரியில் பதிவு செய்யப்பட்ட தகுதி சான்றிதழை வழங்கியுள்ளனர். இது குறித்து விளக்கம் கேட்டபோது பவானி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முகவரி மாற்றி கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். அங்கு சென்ற போது வாகனத்தின் மீது நிதி நிறுவனத்தில் 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்சரசியடைந்த சண்முகசுந்தரம் ஷோரூம் நிர்வாகத்தை அணுகியபோது முறையான பதில் அளிக்கவில்லை.இந்த நிலையில் ஈரோடு மாவட்ட யூஸ்டு கார் டீலர்ஸ் சார்பில் ஹோண்டா ஷோரூம் முற்றுகை நடைபெற்றது. கார் வாங்கியவருக்கு போலி தகுதிசான்று வழங்கிய சம்பவம் ஏற்படுத்தியுள்ளது சம்பவம் தொடர்பாக ஷோரூம் நிர்வாகத்தினர் கார் விற்பனை யாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.