Type Here to Get Search Results !

கோபி அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சி பகுதியில் நியாயவிலைக்டை அமைப்பதற்கு 30 லட்சம் மதிய்யிலான நிலத்தை நன்கொடையாக வழங்கியவரை முன்னாள் அமைச்சரும் கோபிசட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்

கோபி அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சி பகுதியில் நியாயவிலைக்டை அமைப்பதற்கு 30 லட்சம் மதிய்யிலான நிலத்தை நன்கொடையாக வழங்கியவரை முன்னாள் அமைச்சரும் கோபிசட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலமாக நிறைவேற்றப்பட்ட பலவேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோபி ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியினை திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து வெள்ளாங் காட்டுப்பாளையம் பகுதியில் நியாயவிலைக்கடை கட்டிடம் அமைப்பதற்காக தனது சொந்த நிலத்தை இலவசமாக வழங்கிய சுப்பிரமணி எனபவருக்கு பொன்னாடை அணிவித்த வாழ்த்துத்தெரிவித்தார் . இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபமா ,,கோபி ஒன்றிய குழு தலைவர் மௌதீஸ்வரன் , கோபி நகர செயலாளர் ப்ரிணியோ கணேஷ் மற்றும் முன்னாள் கவுன்சிலர் அர்ஜூன்ன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.