Type Here to Get Search Results !

கொங்கு மண்டலத்தில் 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த உத்தமத் தியாகி ஜயா ஈஸ்வரன் நினைவைப் போற்றும் வகையிலும் திருவுருவச்சிலை அரங்கம் அமைப்பதற்கு 2கோடி60 நிதி ஒதுக்கீடு

"கொங்கு மண்டலத்தில் ஏறக்குறைய இரண்டு இலட்சம் ஏக்கர் பாசனம்பொறும் நீர்ப்பாசனத் திட்டமான கீழ்பவானி திட்டம் கொண்டு வர முக்கிய காரணகர்த்தாவாக இருந்த ஈரோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சுதந்தர போராட்டத்தின் பங்கேற்று சுமார் 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த உத்தமத் தியாகி ஜயா ஈஸ்வரன் அவர்களது நினைவைப் போற்றும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையிலும் ஈரோடு மாவட்டத்தில் அன்னாருக்கு திருவுருவச்சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கு ரூ.2.60 கோடி நிருவாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தகவல் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடைபெற்ற சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில், 2021-2022ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, கொங்கு மண்டலத்தில் ஏறக்குறைய இரண்டு இலட்சம் ஏக்கர் பாசனம்பொறும் நீர்ப்பாசனத் திட்டமான கீழ்பவானி திட்டம் கொண்டு வர முக்கிய காரணகர்த்தாவாக இருந்த ஈரோடு தொகுதியின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், சுதந்தர போராட்டத்தின் பங்கேற்று சுமார் 11 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த உத்தம தியாகி ஜயா ஈஸ்வரன் நினைவைப் போற்றும் வகையிலும், இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையிலும் ஈரோடு மாவட்டத்தில் அன்னாருக்கு திருவுருவச்சிலை மற்றும் அரங்கம் அமைப்பதற்கு ரூபாய் இரண்டு கோடியே அறுபது இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்ற அறிவிப்பினை வெளியிட்டார். செய்தித்துறை அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, உத்தமத் தியாகி ஐயா ஈஸ்வரன் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைத்திட ஏதுவாக, உரிய இடத்தினை தேர்வு செய்து, அவ்விடத்திற்கான புலத்தணிக்கை அறிக்கையினை பெற்று அனுப்புமாறும், அமைக்கப்படவுள்ள மேற்படி அரங்கத்தில், உத்தமத் தியாகி ஐயா ஈஸ்வரன் அவர்களின் திருவுருவச் சிலையினை நிறுவிட ஏதுவாக, அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுதார்கள் அல்லது வம்சாவழியினர் அல்லது சமுதாய அமைப்பினர் ஆகியோரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாதிரி புகைப்படம் அல்லது ஓவியத்தை பரிந்துரையுடன் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது, மேலும், மேற்படி அரங்கம் மற்றும் திருவுருவச் சிலை அமைத்திட ஏதுவாக, செந்தர விலைப்பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டத் திட்ட மதிப்பீட்டினை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவரின் மேலொப்பத்துடன் அனுப்பி வைக்குமாறும், முதலமைச்சர் ஒப்புதல் பெற ஏதுவாக, ஐந்து மாதிரி வரைபடங்களையும் அனுப்பி வைக்குமாறும் பொதுப்பணித்துறையின் சென்னை மண்டல முதன்மை தலைமைப் பொறியாளரிடமும் (கட்டடங்கள்) கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உத்தமத் தியாகி ஐயா ஈஸ்வரன் அவர்களுக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், மூடுக்கன்துறை கிராமம் பவானிசாகரில், திருவுருவச்சிலையும் அரங்கமும் அமைத்திட நிருவாக அனுமதியளித்து ஆணை வெளியிடப்பட்டது. பொதுப்பணித்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் (கட்டடங்கள்) சுதந்திரப் போராட்ட வீரர் உத்தமத் தியாகி ஐயா ஈஸ்வரன் ஈரோடு மாவட்டத்தில் திருவுருவச்சிலையும் அரங்கமும் அமைத்திட ஏதுவாக, 2021-2022-ஆம் நிதியாண்டிற்கான செந்தர விலைப்பட்டியல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள ரூ.2,60,00,000 (ரூபாய் இரண்டு கோடியே அறுபது இலட்சம் மட்டும்) திட்ட மதிப்பீட்டினை அனுப்பி வைத்து, அத்திட்ட மதிப்பீட்டிற்கு நிருவாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், முடுக்கன்துறை கிராமம், பவானிசாகரில் வார்டு A பிளாக் எண் 18 T.S NO.28/1A பொதுப்பணித்துறை புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ள 0.46.03 ஹெக். நிலத்தினை உத்தமத் தியாகி ஐயா ஈஸ்வரன் திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கு திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.2,60,00,000 க்கு (ரூபாய் இரண்டு கோடியே அறுபது இலட்சம் மட்டும்) நிதியொப்பளிப்பு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித் தார்கள்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.